நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350'மாடலை அறிமுகம் செய்துள்ளது

கோலாலம்பூர்: 

மலேசியாவில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அதன் புதிய ‘புல்லட் 350 'மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான மாடலாக புல்லட் திகழ்கின்றது. 

இந்நிலையில், நவீன இன்ஜினில், புதிய வடிவமைப்பில் ‘புல்லட் 350' மாடலை நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அந்நிறுவனத்தின் ஷோரூமில் நேற்று அறிமுகம் கண்டது.

கறுப்பு, சிவப்பு மற்றும் கோல்ட் வண்ணத்தில் இந்த ‘புல்லட் 350' மாடல் வெளியிடு செய்யப்பட்டது. 

May be an image of motorcycle and text

கறுப்பு மற்றும் சிவப்பு நிற புல்லட் 350-யின் ஆரம்ப விலை 23,400 வெள்ளியாகும். 

கோல்ட் வண்ணத்தில் இந்த ‘புல்லட் 350' மாடல் 23,900 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 

May be an image of 1 person, motorcycle and text

நவீன சூழலுக்கு ஏற்ப ராயல் என்ஃபீல்ட் செயல்திறனை அதிகரிக்கும் வகையில், புதிய புல்லட் மாடலில் ‘ஜே சீரிஸ்' இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

புல்லட் மாடல் முதன்முறையாக 1932-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 

கடந்த 90 ஆண்டுகளாகப் புல்லட் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. 

மக்கள் மத்தியில் புல்லட் தனித்த அடையாளம் பெற்றுள்ளது.

காலகட்டத்துக்கு ஏற்ப புல்லட்டில் மாற்றங்கள் செய்து வருவதாக ராயல் என்ஃபீல்ட் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரத்யேகமான புல்லட் 350 வெளியீட்டிற்காக ராயல் என்ஃபீல்ட் பெட்டாலிங் ஜெயா ஷோரூமில் எங்களுடன் இணைந்ததற்காக அனைத்து ஊடகங்களுக்கும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset