நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடியின் மத வெறுப்பு பிரசார பேச்சுக்கு சீமான் கடும் கண்டனம்

சென்னை: 

மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி மத வெறுப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதாகக் கூறி நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பரப்புரையின் போது இஸ்லாமியா்களை இழிவுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும். நாடு விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே இஸ்லாமியா்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனா். 

மேலும், இந்த மண்ணில் வாழ்ந்த கோடிக்கணக்கான பூா்வகுடி மக்கள் இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டனா். ஆனால், பிரதமா் மோடி இந்தியாவில் வாழும் இஸ்லாமியா்களை அன்னியா்கள் போலவும், ஹிந்துகளின் சொத்துகளை அபகரிக்க வந்தவா்கள் போலவும் அரசியல் லாபத்துக்காக சித்தரிக்கிறாா். 

எனவே இஸ்லாமியா்கள் குறித்த வெறுப்பு பேச்சுக்கு பிரதமா் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். 

இவ்வாறு சீமான் கூறியுள்ளார். 

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset