நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல்: அதிபர் முஹம்மத் முய்சுவின் கட்சி அமோக வெற்றி

மாலே:

மாலத்தீவின் 20-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது.

நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முய்சு கட்சி அதிகப்படியான தொகுதிகளை வென்றது.

இது நாடாளுமன்றத்தில் 3-இல் 2 பங்காகும்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து முய்சு தனது சீன ஆதரவு செயல்பாடுகளை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு முய்சுவின் பிஎன்சி கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்ந்தே வெறும் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தார்கள்.

இதனால் அவரால் விரும்பிய சட்டங்களை எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.

முஹம்மத் முய்சு  சட்டத்தைக் கொண்டு வர முயன்றால் நாடாளுமன்றத்தில் முறியடிக்கப்பட்டு வந்தது.

தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைத்துள்ளதால், முய்சு நினைத்த சட்டங்களை நிறைவேற்ற முடியும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset