நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் தாக்குதலில் 18 குழந்தைகள் உயிரிழப்பு

ரஃபா : 

காசாவில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில், 18 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், ஆறு மாதங்களைக் கடந்துள்ளன

இந்நிலையில், இஸ்ரேல் நேற்று நடத்திய வான் வழி தாக்குதலில், காசா பகுதியிலுள்ள மருத்துவமனை அருகே இருந்த கட்டடம் சேதமடைந்தது.

இதில், தங்கியிருந்த 18 குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில், 34,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு உதவும் வகையில் கூடுதல் நிதியை அமெரிக்க அரசு ஒதுக்கியுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset