நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு

திருவனந்தபுரம்: 

வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் தொடர்பாக பொய்யான செய்தி வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக யூடியூப் சேனல் று செய்தி வெளியிட்டது.

இதனால் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

பொய் செய்திகளை பரப்புவதாக அச் சேனலின் மீது திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மன்னிப்பு கேட்டதோடு அந்தச் செய்தியை இணைய சேனல் திரும்பப் பெற்றது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset