செய்திகள் உலகம்
அடுத்த அடி இன்னும் பலமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்:
ஈரான் எல்லைக்குள் இஸ்ரேல் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்ட சம்பவம், எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு போன்றது.
மேலும், எங்களை சீண்டினால் அடுத்த அடி மிகவும் பலமாக இருக்கும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிராப் தோலாஹியான் எச்சரித்துள்ளார்.
மேற்காசியா பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் ஆதரவாளர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலின்போது, சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துாதரகம் தாக்கப்பட்டது. தூதரக அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதைஅடுத்து, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது.
அதன்படி, ஒரே நாளில், 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலில் ஈடுபட்டது.
இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்தது.
இந்நிலையில், ஈரானின் இஸ்பகான் பகுதியில், நேற்று முன்தினம் சில ட்ரோன்கள் பறந்ததாகவும், அவற்றை ஈரான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இவை குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசைன் அமிராப் தோலாஹியான் கூறியுள்ளதாவது,
அவை எதுவும் பெரிய சம்பவம் இல்லை. ஏதோ சில ட்ரோன்கள் பறந்ததாகக் கூறப்படுகிறது. இது எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்றவை.
அதே நேரத்தில், ஏதாவது விஷமத்தனத்தில் இஸ்ரேல் இறங்கினால், எங்களுடைய அடுத்த அடி, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருக்கும் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm