நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் கடுமையான மழை, வெள்ளம்; 100 பேர் பலி 

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு, வட கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 100 பேர் பலியாகியுள்ள வேளையில் பலர் காயமடைந்துள்ளனர். 

கடுமையான மழை காரணமாக கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், பஞ்சாப், மற்றும் ஜம்மு காஸ்மீர் ஆகிய பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 

பெரும் வெள்ளம் காரணமாக கட்டிடங்களும் இடிந்து விழுந்தது. சுமார் 3261 குடியிருப்புகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 22ஆம் தேதி வரை பாகிஸ்தானில் கடுமையான மழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு NDMA தெரிவித்தது. 

அத்துடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்த்ப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset