நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பான் நாட்டின் இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து; ஏழு பேரைக் காணவில்லை 

தோக்கியோ: 

ஜப்பான் நாட்டின் இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணம் செய்த எழுவரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. 

ஜப்பான் நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு வேளையில் நிகந்த இந்த விபத்தில் தற்போது வரை ஒருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் தற்காப்பு ராணுவ அமைப்பின் பேச்சாளர் கூறினார். 

ஹலிகாப்டரின் சிதறிய பாகங்க்கள் என்று நம்பப்படும் சில பாகங்கள் கடலில் மிதந்து கொண்டிருப்பதால் இரு ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று ஜப்பான் நாட்டின் தற்காப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார். 

இரு ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான இரு ஹெலிகாப்டர்களும் MITSUBISHI SH- 60K ரக ஹெலிகாப்டராகும் என்று ஜப்பான் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset