நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என குறிப்பிடப்பட்டவில்லை: அசாதுதீன் ஓவைசி

ஹைதராபாத்:

பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினர் என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை, அதற்கு பதிலாக விளிம்புநிலை மக்கள் என்று கூறியுள்ளது என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டினார்.

தேர்தல் அறிக்கையில் பல்வேறு வகையான கடன் திட்டங்கள், தொழில்தொடங்க நிதியுதவி போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர் என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. சிறுபான்மையினர் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

முஸ்லிம்களை பாஜக முற்றிலுமாக மறந்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட சிறுபான்மையினர் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. ஆனால், பாஜக அந்த வார்த்தையை கடுமையாக வெறுக்கிறது.

தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மத்தியில்தான் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் அதிகம் உள்ளது. இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசுதான் உள்ளது.

சிறுபான்மையினர் குறித்த வெறுப்புணர்வை பாஜக திட்டமிட்டு வளர்க்கிறது என்றார் ஒவைசி.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset