நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வாக்குச்சாவடியில் வாக்களிப்பவரின் வரிசை, கூட்டம் போன்ற விவரம் இணையம் மூலம் அறிந்து வாக்களிக்க ஏற்பாடு

சென்னை: 

முதல்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறுகிறது. 

இந்நிலையில், வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை இணையதளம் மூலமாக வாக்காளர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் சுமார் 16.63 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த உள்ளனர். 

இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ள உதவுகிறது https://erolls.tn.gov.in/queue/என்ற இணையதள முகவரி.

இந்த தளத்தின் பக்கத்தில் வாக்காளர்கள் தங்களது மாவட்டத்தின் பெயர், தொகுதியின் பெயர், வாக்குச்சாவடியின் விவரத்தை உள்ளிட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பவரின் எண்ணிக்கை குறித்த விவரத்தை அறிந்து கொள்ளலாம். 

வாக்களிக்கச் செல்பவர்கள் வாக்களிக்கும் இடத்தில் கூட்டம் அதிகம் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலும்.
 
இந்த விவரங்கள் தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்பட்டுள்ள பூத் ஸ்லிப்பில் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது வாக்களர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல், (மலேசிய நேரம் காலை 9.30 மணி முதல்) இந்த தளத்தின் மூலம் மேற்கூறிய விவரத்தை வாக்காளர்கள் அறிந்து கொள்ளலாம்.

வெய்யில் காலமான தற்போது இத்தகைய ஏற்பாடு வயது முதிர்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கூட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் அவர்கள் வாக்களிக்கச் செல்லலாம்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset