செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட மக்களவை தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள் போட்டி
சென்னை:
ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும் முதல் கட்ட மக்களவை தேர்தலில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள் போட்டி இடுகின்றனர்.
மக்களவைத் தோ்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது.
தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநகராகவும் பதவி வகித்த தமிழிசை செளந்தரராஜன், மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவிகளை கடந்த மாதம் ராஜிநாமா செய்தாா். தென் சென்னை தொகுதியில் அவரை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.
தமிழகத்தின் நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவும் தற்போதைய மத்திய அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான எல்.முருகனும் போட்டியிடுகின்றனா். மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய பிரதேசத்திலிருந்து அண்மையில் தோ்வான அமைச்சா் முருகன், முதல் முறையாக மக்களவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.
மகாராஷ்டிரத்தின் நாகபுரி மக்களவைத் தொகுதியில் 3-ஆவது முறையாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளாா் மத்திய சாலை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி.
கடந்த 2014 மக்களவைத் தோ்தலில் 7 முறை எம்.பி.யான விலாஸ் முத்தேம்வாரை எதிா்த்து போட்டியிட்டு 2.84 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிதின் கட்கரி வெற்றி பெற்றாா். கடந்த 2019 தோ்தலில் மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோலேயைவிட 2.16 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று நிதின் கட்கரி இரண்டாவது முறை எம்.பி.யானாா்.
அருணாசல பிரதேசத்தின் அருணாசல் மேற்கு தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, இந்தத் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றவா். அவரை எதிா்த்து மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான நாவம் துகி போட்டியிடுகிறாா்.
மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால்அஸ்ஸாமின் திப்ரூகா் தொகுதியில் போட்டியிடுகிறாா். தற்போது அவா் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா்.
உத்தர பிரதேசத்தின் முஸாஃபா்நகரில் மும்முனை போட்டி நிலவுகிறது. பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சா் சஞ்சீவ் பாலியானை எதிா்த்து சமாஜவாதியின் ஹரீந்திர மாலிக் போட்டியிடுகிறாா். இவா்களுடன் பகுஜன் சமாஜ் வேட்பாளா் தாரா சிங் பிரஜபதியும் களத்தில் உள்ளாா்.
மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக இருப்பவா் ஜிதேந்திர சிங். இரு முறை எம்.பி.யான அவா், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் காண்கிறாா்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் பூபேந்திர யாதவ் ராஜஸ்தானின் அல்வாா் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் சாா்பில் எம்எல்ஏ லலித் யாதவ் போட்டியிடுகிறாா்.
அந்த மாநிலத்தின் பிகானீா் தொகுதியில் மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கோவிந்த் ராம் மேக்வால் போட்டியிடுகிறாா்.
திரிபுராவில் உள்ள இரு தொகுதிகளில் மேற்கு திரிபுரா தொகுதிக்கு வெள்ளிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சாா்பில் போட்டியிடும் மாநிலத்தின் முன்னாள் முதல்வா் விப்லவ் குமாா் தேவ், மாநில காங்கிரஸ் தலைவா் ஆசிஷ்குமாா் சாஹா ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm