செய்திகள் தமிழ் தொடர்புகள்
708 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு: மாவட்ட தேர்தல் அதிகாரி
சென்னை:
708 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுக்கு தேவையான 11,843 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4,469 கட்டுப்பாட்டு கருவிகள், 4,842 விவிபாட் இயந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 685 பதற்றமான, 23 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 708 வாக்குச்சாவடி மையங்களுக்கு காவல் துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நுண் பார்வையாளர்கள் மூலமும் இந்த வாக்குச்சாவடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மேலும், அனைத்து பதற்றமான வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am
திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை
April 29, 2024, 7:45 pm
நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்' விருது: விசிக தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
April 29, 2024, 11:50 am
தமிழகத்தில் மஞ்சள், பருப்பு உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்வு
April 28, 2024, 1:34 pm
மீண்டும் ஆரம்பமாகிறது இலங்கை நாகப்பட்டினம் இடையிலான கப்பல் சேவை
April 28, 2024, 11:59 am
அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய குருவி கைது
April 27, 2024, 11:52 am
லுங்கி அணிந்தபடி மூட்டைகளை தூக்கிச் செல்லும் புதுவை முன்னாள் அமைச்சர்: வைரலாகும் காணொலி
April 25, 2024, 6:56 pm