நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ணம் மென். சிட்டி, அர்செனல் ஏமாற்றம்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் அணிகள் தோல்வி கண்டு வெளியேறின.

எத்திஹாட் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டன.

இதனால் வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய ரியல்மாட்ரிட் அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

தோல்வி கண்ட மென்செஸ்டர் சிட்டி அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன்முனிச் அணியினர் 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset