நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது: கார்டியாலோ

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கைப்பற்ற மென்செஸ்டர் சிட்டி இலக்கு கொண்டுள்ளது.

ஆனால் மீண்டும் மகுடம் சூடுவது எளிதல்ல என்றும் பல தடைக்கற்கள் உள்ளன என்றும் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியாலா தெரிவித்துள்ளார்.

இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.

நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே லீக் பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என்றார் அவர்.

அவற்றில் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் லீக் பட்டக் கனவு கலைந்துவிடும் என்று கார்டியோலா கூறினார்.

சிட்டி அதன் அடுத்த ஆட்டத்தில் வோல்வேர்ஹாம்டன் அணியுடன் மோதுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset