செய்திகள் விளையாட்டு
பாரிஸ் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றம்- தொடர் ஓட்டம் தொடங்கியது
ஏதென்ஸ்:
33-ஆவது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26-ஆம் தேதி முதல் ஆகஸ்டு 11-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றார்கள்.
போட்டிக்கான 'கவுண்டவுன்' தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படுவது நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ஒலிம்பியாவில் நேற்று நடந்தது.
வழக்கமாகச் சூரியஒளியைக் குவிலென்சின் மையத்தில் விழச் செய்து, அதிலிருந்து உருவாகும் வெப்பத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும்.
ஆனால் நேற்று ஒலிம்பியாவில் மேகமூட்டமான சீதோஷண நிலை நிலவியதால் சூரிய ஒளியைப் பார்க்க முடியவில்லை.
வானிலை மாற்றம் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு ஏற்ப மாற்று ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி கிரேக்கத்தின் பாரம்பரிய உடையணிந்த நடிகை மேரி மினா சூரிய கடவுளை நோக்கி வணங்கி விட்டு அங்கு சிறிய பானையில் எரிந்து கொண்டிருந்த ஜூவாலையில் தீபத்தை ஏற்றினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 10:19 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா
April 30, 2024, 8:43 am
மென்செஸ்டர் சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது: கார்டியாலோ
April 30, 2024, 8:39 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி
April 29, 2024, 12:09 pm
ஹைதராபாத்தை அணியை சென்னையில் வீழ்த்தியது சிஎஸ்கே
April 29, 2024, 11:05 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: நடால், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
April 29, 2024, 9:37 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி
April 29, 2024, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am