
செய்திகள் தொழில்நுட்பம்
செல்போன் டவருக்குப் பதிலாக செயற்கைகோள் மூலம் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி
பெய்ஜிங்:
செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கைகோள் மூலமாக விவேகக் கைப்பேசிகளை இயக்கும் சோதனையில் சீனா வெற்றி கண்டு சாதனை படைத்துள்ளது.
இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016-ஆம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது.
இந்தச் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தரையில் கைப்பேசிகளைக் கோபுரங்கள் இல்லாமல் கைத்தொலைப்பேசிகளில் பேசலாம் என்று கூறப்படுகிறது.
கைத்தொலைப்பேசிகள் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் தொலைப்பேசி செயற்கைக்கோள்கள் வழியாகவே விவேகக் கைப்பேசிகளில் பேச முடியும்.
தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
August 3, 2025, 7:14 pm
இந்தியாவில் வெறும் ரூ.1 விலையில், ஒரு மாதம் செல்லுபடியாகும் 'ஃப்ரீடம் ஆஃபர்' சிறப்...
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 18, 2025, 6:00 pm
சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் 30% விமானத்துறை வேலைகள் உருமாற்றம் க...
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm
மீண்டும் 9000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது
July 2, 2025, 11:43 am
துபாயில் அடுத்த ஆண்டு பறக்கும் டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்படலாம்
June 27, 2025, 8:31 pm