நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனமழையில் மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: விமான போக்குவரத்து தடைப்பட்டது

துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலநிலை மோசமடைந்துள்ள நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிரத்தன்மை கொண்ட அபாயகரமான காலநிலை முன்னறிவிக்கப்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை மிகவும் விழிப்புடன் இருக்குமாறு மாநகர அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும், சில பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இடைவிடாத மழையும் தொடர் இடி மின்னலும் அங்குள்ள மக்களை உலுக்கியுள்ளது.

பலத்த மழை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த 21 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

அத்துடன் தரையிறங்கவிருந்த 24 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

3 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. 

இதனிடையே, துபாய் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் பதிவு செய்துள்ள பயணிகள் முறையானத் தகவலைப் பெற்று பயணத்தை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset