நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி

பாரிஸ்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்துப் போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு பிஎஸ்ஜி அணியினர் முன்னேறி உள்ளனர்.

ஒலிம்பிக் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் பார்சிலோனா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இரு ஆட்டங்களின் முடிவில் 6-4 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை 5-4 என்ற மொத்த கோல் கணக்கில் வீழ்த்திய புரோசியா டோர்ட்மண்ட் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset