நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் செல்சி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 6-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணிக்காக அதன் முன்னணி ஆட்டக்காரர் கோல் பால்மர் 4 கோல்களை அடித்தார்.

மற்ற இரு கோல்களை நிகோலஸ் ஜாக்சன், அல்ஃபி ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset