செய்திகள் இந்தியா
இந்தியாவை ஒன்றிணைக்கும் காங்கிரஸுக்கும் பிளவுப்படுத்தும் பாஜகவுக்குமான தேர்தல் இது: ராகுல்
புது டெல்லி:
இந்த மக்களவைத் தேர்தல் இந்தியாவை ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களை பிளவுபடுத்த முயல்பவர்களுக்கும் இடையேயான தேர்தல் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, காங்கிரஸின தேர்தல் அறிக்கை நாட்டின் சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் "முஸ்லிம் லீக்' கட்சி கொண்டிருந்த அதே சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று விமர்சனம் செய்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், 2024 மக்களவைத் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும்.
அதாவது, இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரஸுக்கும், மக்களவை பிளவுபடுத்த முயல்பவர்களுக்கும் இடையேயான போட்டி.
நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து, அவர்களைப் பலப்படுத்தியவர்கள் யார்? நாட்டின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடியவர்கள் யார்? என்பதற்கு வரலாறே சாட்சி.
"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுடன் துணை நின்றது யார்?
இந்திய சிறைகள் அனைத்தும் காங்கிரஸ் தலைவர்களால் நிரம்பி வழிந்தபோது, நாட்டை பிளவுபடுத்திய சக்திகளுடன் இணைந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யார்?
எனவே, அரசியல் தளங்களில் பொய்களைப் பரப்புவதால் வரலாறு மாறிவிடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 4, 2026, 4:26 pm
திருச்சூர் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
January 2, 2026, 3:20 pm
புத்தாண்டு தினத்தில் சபரிமலையில் திரண்ட பக்தா்கள்
December 31, 2025, 12:08 pm
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு ஒன்றிய அரசு இதுவரை வீடு ஒதுக்காமல் இழுத்தடிப்பு
December 29, 2025, 1:18 pm
விமானிகளுக்கு போதிய ஓய்வளிக்க 130 விமான சேவைகளை குறைக்க முன்வந்தது இண்டிகோ நிறுவனம்
December 27, 2025, 8:20 am
திருப்பதி கோவில் காணிக்கையில் ரூ.100 கோடி மோசடி செய்தவர்: விரைவில் தீர்ப்பு
December 26, 2025, 4:13 pm
பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள்: இந்திய அரசு அறிவிப்பு
December 26, 2025, 12:19 pm
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
December 24, 2025, 8:54 pm
