
செய்திகள் இந்தியா
சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை ஏற்றுமதி செய்யவிருக்கும் இந்தியா
புதுடெல்லி:
சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.
சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு அந்நாட்டின் ஐந்து முன்னணி கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமானது.
கூடிய விரைவில் மேலும் 2,000 டன் அரிசியைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஏப்ரல் மாதத்தில் கப்பல் மூலம் அரிசி அனுப்பிவைக்கப்படும் என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அரிசி பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு ரூ. 1,325 கோடி மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கு இதுவரை 250 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக திரு மேத்தா தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm