
செய்திகள் இந்தியா
சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை ஏற்றுமதி செய்யவிருக்கும் இந்தியா
புதுடெல்லி:
சிங்கப்பூருக்கு 1,600 டன் அரிசியை இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு ஏற்றுமதி செய்ய இருக்கின்றது.
சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் அமைப்புடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவின் தேசியக் கூட்டுறவு ஏற்றுமதி அமைப்பு அந்நாட்டின் ஐந்து முன்னணி கூட்டுறவு அமைப்புகளுக்குச் சொந்தமானது.
கூடிய விரைவில் மேலும் 2,000 டன் அரிசியைச் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஏப்ரல் மாதத்தில் கப்பல் மூலம் அரிசி அனுப்பிவைக்கப்படும் என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் சம்மேளனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா தெரிவித்தார்.
சிங்கப்பூரில் அரிசி பற்றாக்குறை ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு ரூ. 1,325 கோடி மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூருக்கு இதுவரை 250 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக திரு மேத்தா தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 9:13 pm
தெலங்கானா அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீன் பதவியேற்றார்
October 31, 2025, 11:58 am
உங்கள் வங்கிக் கணக்கில் 'இதை' அப்டேட் செய்துவிட்டீர்களா?: நாளை முதல் இந்தியாவில் இது கட்டாயம்
October 29, 2025, 7:23 am
இந்தியாவில் எரிசக்தி உற்பத்தி அதிகரித்து வருவதால் 2030ஆம் ஆண்டுக்குள் நிலக்கரி மின்சாரம் உச்சமடையும்
October 27, 2025, 9:31 pm
5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு விமான சேவை
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm