நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுலுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால்... பிரசாந்த கிஷோர் யோசனை

புது டெல்லி:

மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி காங்கிரஸுக்கு கிடைக்கவில்லை என்றால் ராகுல் காந்தி ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் பிரசாந்த் கிஷோர் வகுத்து வந்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர் விலகினார்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் குறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளாக ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடித்தர முடியவில்லை.  அவர் ஓய்வெடுத்துக்கொள்வதால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த 5 ஆண்டுகள் வேறு யாராவது காங்கிரஸ் கட்சியை வழிநடத்த அவர் அனுமதிக்க வேண்டும்.

தனக்கு எல்லாம் தெரியும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். உதவியின் தேவையை அவர் உணரவில்லை என்றால் யாரும் அவருக்கு உதவ முடியாது. தான் நினைப்பதைச் செய்யக்கூடிய ஒருவர் தேவை என்று அவர் நம்புகிறார். அது சாத்தியமில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டாலும், முக்கிய முடிவுகளை  ராகுல்தான் இறுதி செய்கிறார் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset