செய்திகள் தொழில்நுட்பம்
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியது
சென்னை:
இந்தியா உட்பட உலக அளவில் வாட்ஸ்அப் சேவை முடங்கியுள்ளதாக டவுன் டிட்டெக்டர் தளத்தில் பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுன் டிட்டெக்டர் தளத்தில் இதனை தெரிவித்திருந்தனர். இதை வாட்ஸ்அப் தரப்பும் உறுதி செய்துள்ளது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் புதன்கிழமை (ஏப்ரல் 3) இரவு உலக அளவில் வாட்ஸ்அப் சேவையை தங்களால் பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் புகார் தெரிவித்தனர். அமெரிக்காவில் 12 ஆயிரம் பேர், இந்தியாவில் 30 ஆயிரம் பேர், பிரிட்டனில் 46 ஆயிரம் பேர், பிரேசில் நாட்டில் 42 ஆயிரம் பேர் என வாட்ஸ்அப் சேவை முடக்கம் குறித்து டவுன் டிட்டெக்டர் தளத்தில் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவில் பயனர்கள் சிலர் இன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்துவதிலும் சிக்கல் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மெசேஜ்களை அனுப்ப முடியவில்லை, பெற முடியவில்லை மற்றும் செயலியை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் எதிர்கொள்ளும் சிக்கலும் இதில் ஹைலைட் செய்யப்பட்டு இருந்தது. பெரும்பாலான பயனர்கள் மெசேஜ் அனுப்புவதில் சிக்கலை எதிர்கொண்டதாக தெரிவித்தனர்.
“பயனர்களில் சிலர் இப்போது வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டு வருவதை நாங்கள் அறிவோம். விரைந்து 100 சதவீத பயன்பாட்டு சேவையை பயனர்கள் அனைவருக்கும் வழங்கும் வகையில் பணியாற்றி வருகிறோம்” என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மேத்தாவின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 11:50 am
சிறுவர்கள் வாழ்க்கையில் விளையாடிய மெட்டா: 375 மில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்
March 24, 2026, 12:34 pm
காப்புரிமைப் போர்: சீனத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே முற்றிய மோதல்
March 23, 2026, 10:31 am
வெளிநாட்டு அனிமேஷன் தாக்கம்: குழந்தைகள் சிந்தனைக்கு புதிய அறைகூவல்
March 22, 2026, 5:22 pm
உலகின் முதல் 'தொழுகைக்கு உகந்த' செயற்கை கால்: மலேசியப் பேராசிரியரின் சாதனைப் படைப்பு
March 13, 2026, 12:48 pm
சிப் வடிவமைப்புத் துறையில் சாதனை: ‘Arm’ நிறுவனத்துடன் கைகோர்க்கும் மலேசியா
March 13, 2026, 12:45 pm
பசுமை தொழில்நுட்பத்தில் ஜொகூர் முன்னிலை: ‘ZData’ மையத்திற்கு சான்றிதழ் வழங்கல்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
