நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் பசாரில் சட்ட விரோதமாக கடன் வழங்கிய கணவன் - மனைவி கைது

ஈப்போ:

ரமலான் பசாரில் உரிமம் பெறாத பணக் கடன், வணிக அட்டைகள், இணைய சூதாட்டத்தை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஈப்போ அரங்கத்தில் நடந்த இந்த சம்பவம்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனைகளை மேற்கொண்டனர்.

53, 54 வயது மதிப்புமிக்க அவ்விருவரையும் சித்திவானில் உள்ள வீடொன்றில் கைது செய்யப்பட்டனர்.

இதனை பேரா மாநில போலீஸ் தலைவர் முகமட் யுஸ்ரி பஸ்ரி உறுதிப்படுத்தினார்.

கைதானவர்களிடம் இருந்து கைத்தொலைபேசிகள்,  பணம் கொடுத்தவர்களின் பட்டியலைப் பதிவு செய்த குறிப்பேடுகள், பணக் கடன் சலுகைகள், இணைய சூதாட்டத்துடன் கூடிய 120 கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான இருவரும் உடல் ஊனமுற்றவர்களாவர். 

30 ரிங்கிட் சம்பளத்திற்கு அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் கூறினார்.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset