நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் விவாதம் கூடாது: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் விவாதங்கள் நடத்தப்படக்கூடாது.

மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

நேற்றைய தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தார்.

இச்சம்பள உயர்வு குறித்து விவாதம் நடத்தக்கூடாது.

மேலும் நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் ஒற்றுமை அரசாங்கம் மதிக்கிறது.

 தனியார் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உற்பத்தித்திறன் அதிகரிக்கும் போது அதிக ஊதியம் கிடைப்பதை உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் குறைந்தபட்ச ஊதிய விகிதம் மீண்டும் ஆராயப்படும் என்று அவர் கூறினார்.

இந்த அரசு ஊழியர்கள் முன் வரிசைப் பணியாளர்கள். நாட்டின் பொருளாதாரம் மேம்பாட்டை நோக்கி நகர வேண்டும்.

அதனால் சிறந்த வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றால், அதிக உற்பத்தி, செயல்திறன் கொண்ட அரசு ஊழியர்கள் தேவை என்று ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset