செய்திகள் மலேசியா
பிரதமர் எப்போது வேண்டுமானாலும் பிரச்சாரத்திற்கு வரலாம்: ஃபாஹ்மி
புத்ராஜெயா:
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எந்த நேரத்திலும் பிரச்சாரம் செய்யலாம்.
கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் இதனை விளக்கினார்.
நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சாக் தாவோவின் பிரச்சாரத்தின் போது அதன் தலைவராக இருக்கும் அன்வார் இல்லாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
பிரதமர் எந்த நேரத்திலும் பிரசாரத்திற்கு வரலாம்.
இதற்கு முன்னர் ஹரி ராயா விருந்து நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி புசாருடன் அவர் இங்கு வந்திருந்தார்.
அதே வேளையில் கோல குபு பாரு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் ஆய்வு செய்து வருகிறார் என்று அமைச்சர் ஃபாஹ்மி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 16, 2024, 7:03 pm
இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக கஜகஸ்தான் சென்றடைந்தார் பிரதமர்
May 16, 2024, 6:18 pm
தகவல், தொடர்பு அமைச்சின் 522 பணியாளர்கள் சிறந்த சேவைக்கான விருதை பெற்றனர்
May 16, 2024, 5:16 pm
சாலையைக் கடக்க முயன்ற புலி விபத்தில் மரணமடைந்தது
May 16, 2024, 4:52 pm
மின்னியல் சிகரேட் பயன்பாடு 600 விழுக்காடு உயர்ந்துள்ளது
May 16, 2024, 4:19 pm
நாடு முழுவதும் போதுமான இணையச் சேவை இருப்பதை அரசு உறுதி செய்யும்: ஸாஹித் ஹமிடி
May 16, 2024, 3:59 pm