செய்திகள் இந்தியா
பாஜகவின் வாஷிங் மெஷின்: காங்கிரஸ் வினோத பிரசாரம்
புது டெல்லி:
பாஜகவில் சேர்ந்தால் அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்பட்டு வருவதை எடுத்துரைக்கும் வகையில்,வாஷிங் மெஷினுடன் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அக்கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜக வாஷிங் மெஷின் ரூ.8,500 கோடி விலை கொண்டது. இது தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பெற்ற நன்கொடை தொகையாகும்.பாஜகவில் சேருங்கள், வழக்குகள் முடிக்கப்படும் என்கிற கொள்கையுடன் செயல்படுகிறது.
முந்தைய காங்கிரஸ் அரசில் விமானத் துறை அமைச்சராக இருந்த புரபுல் படேல் மீது ஏர் இந்தியா ஊழல் மூலம் ரூ.30,000 கோடி வரை முறைகேடு செய்ததாக பாஜக குற்றம்சாட்டியது.
சிபிஐ 2017ல் இரு வழக்குகளைப் பதிவு செய்தது. தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு எதிரான வழக்குகளில் ஆதாரம் இல்லை என வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ அண்மையில் தாக்கல் செய்துள்ளது.
இதேபோல், 21 பேர் பாஜகவில் இணைந்தபிறகு அவர்கள் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am