நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியரை மீட்ட இந்திய கடற்படை

புது டெல்லி:

கடற்கொள்ளையர்களிடம் இருந்து 23 பாகிஸ்தானியரை மீட்ட இந்திய கடற்படையினர் மீட்டனர்.

ஏடன் வளைகுடா அருகில் சோகோட்ரோ தீவுக்கு 90 கடல் மைல் தொலைவில் ஈரான் மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.

இதையடுத்து, அரபிக் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பலும் ஏவுகணைகளை அழிக்கும் திறன்கொண்ட ஐஎன்எஸ் திரிசூல் போர்க்கப்பலும் கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தன.

சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் முடிவில் கப்பலைக் கடத்திய 9 கடற்கொள்ளையர்கள் சரணடைந்தனர். கப்பல் பணியாளர்கள் 23 பேர் பாதுகாக்க மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.

சரணடைந்த கடற்கொள்ளையர்கள் இந்தியா கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset