நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பாலிடெக்னிக் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன: தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

சென்னை:

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பட்டயத் தேர்வு (பாலிடெக்னிக்) தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதன்படி, அரசு, அரசு உதவிபெறும், தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் 10, 12- ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு 24ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதியிலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 4 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடத் தேர்வுகளுக்கான தேதியும் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது பாலிடெக்னிக் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset