நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என நம்புகிறோம்: ஐ.நா.

ஜெனீவா:

இந்தியாவில் மக்களின் அரசியல் மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாக்கப்பட்டு தேர்தல் சுதந்திரமாக நடைபெறும் என நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக தில்லி முதல்வர் கேஜரிவால் ஊழல் வழக்கு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டது.

காங்கிரஸின் வங்கிக் கணக்கு முடக்கம்  உள்ளிட்டவை தொடர்பாக ஐ.நா.பொதுச்செயலரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு  அவர், மற்ற நாடுகளைப்போல் இந்தியாவிலும் மக்களின் அரசியல் மற்றும் குடிமை உரிமைகள் பாதுகாக்கப்படும்; தேர்தல் சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் என நம்புகிறோம் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset