செய்திகள் மலேசியா
மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வாருங்கள்: துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கருத்து
கோலாலம்பூர்:
மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவான மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் மித்ரா செயற்குழுவின் தலைவர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார்.
பல்வேறு தரப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பிறகு, மித்ரா என்னும் பிரிவானது மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இடம்பெற செய்ய வேண்டும்.
இதனால் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக மித்ராவை கண்காணிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் மலேசிய இந்திய சமூகம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்காக மடானி அரசாங்கத்திற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்தது.
சுமார் 90 விழுக்காட்டு இந்தியர்கள் அன்வாருக்குத் தங்களின் வற்றாத ஆதரவினைத் தெரிவித்தனர்.
பிரதமர் துறையின் கீழ் பல்வேறான சலுகைகளும் சிறப்புகளும் மித்ராவிற்குக் கிடைக்கும். இதன் காரணமாக மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருக்க வேண்டும் என்று தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 3:21 pm
சாயம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து
April 29, 2024, 1:29 pm
கேஎல்ஐஏ-வில் வெடிகுண்டு மிரட்டல்: சந்தேக நபர் இன்று குற்றஞ்சாட்டப்படுவார்
April 29, 2024, 12:14 pm
கோல குபு பாருவில் மருத்துவ விழிப்புணர்வு முகாம்
April 29, 2024, 11:35 am
டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஶ்ரீ சரவணன் தலைமையில் தென்னமரத் தோட்ட மண்ணின் மைந்தர்களின் ஒன்றுக்கூடல்
April 29, 2024, 11:08 am
அவதூறு, நிந்தனைக் குற்றச்சாட்டுகளை செகுபார்ட் மறுத்துள்ளார்
April 29, 2024, 11:06 am
மலேசியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தனபாலன் சாதனை
April 29, 2024, 11:04 am