நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வாருங்கள்: துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் கருத்து 

கோலாலம்பூர்: 

மலேசிய இந்தியர் உருமாற்று பிரிவான மித்ராவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் மித்ரா செயற்குழுவின் தலைவர் டத்தோ ஆர்.ரமணன் கூறினார். 

பல்வேறு தரப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்ட பிறகு, மித்ரா என்னும் பிரிவானது மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இடம்பெற செய்ய வேண்டும். 

இதனால் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக மித்ராவை கண்காணிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். 

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலில் மலேசிய இந்திய சமூகம் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்காக மடானி அரசாங்கத்திற்கு வாக்களித்து வெற்றிப்பெற செய்தது. 

சுமார் 90 விழுக்காட்டு இந்தியர்கள் அன்வாருக்குத் தங்களின் வற்றாத ஆதரவினைத் தெரிவித்தனர். 

பிரதமர் துறையின் கீழ் பல்வேறான சலுகைகளும் சிறப்புகளும் மித்ராவிற்குக் கிடைக்கும். இதன் காரணமாக மித்ரா பிரதமர் துறையின் கீழ் இருக்க வேண்டும் என்று தொழில்முனைவோர், கூட்டறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset