
செய்திகள் மலேசியா
வீடு கட்டுவதில் சிக்கலை எதிர்நோக்கும் இந்தியக் குடும்பங்கள்
ஈப்போ:
பேரா மகிழம்பூ கம்போங் பாரு எனும் இடத்தில் வழங்கப்பட்ட நிலத்தில் அடிபடை வசதியில்லாததால் (கால்வாய், சாலை) 27 இந்தியக் குடும்பங்கள் முறையே வீடிகள் கட்டி குடியேற முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலைத் தெரிவித்தனர்
சுமார் 50 ஆண்டு காலமாக மகிழம்பூவில் உள்ள ஸ்ரீ் ராஐ ராஜேஸ்ரி ஆலய அருகில் இருந்த கம்போங் பாரு அரசாங்க நிலத்தில் வசித்து வந்தோம்.
எங்களுக்கு நிரந்தர நிலத்தை அரசாங்கம் வழங்க வாக்குறுதி அளித்தது. அதன் படி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் வழங்கப் பட்டது.
அதில் அடிப்படை வசதிகள் இல்லை இதனால் இந்த நிலத்தில் இன்னமும் முறையே வீடு கட்டி கொள்ள இயலாமல் இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான பி. இளங்கோவன் கூறினார்.
இந்த நிலம் கிடைக்க பல ஆண்டுகள் நடத்தி வந்த போராட்டத்திற்குப் பின்னர் நிலம் கிடைத்து. அதில் இன்னமும் குடியேற இயலவில்லை.
இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இன்று ஸ்ரீ ராஜ ராஜேஸரவரி ஆலயத்தில் நடைபெற்ற மகிழம்பு மஇகா ஆண்டுக் கூட்டத்தில் கலத்துகொண்ட பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். மோகன்,மகிழம்பூ மஇகா கிளைத் தலைவர் எம். விவேகனந்தனிடமும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் நிலையை எடுத்துரைத்தனர்.
எங்களுக்கு வயதாகி விட்டது. வழங்கப்பட்ட நிலத்தில் குடியேற வேண்டும் என்று எங்களுடைய ஆசையை நிறைவேற்ற மாநில அரசாங்கம் உதவ வேண்டும் என்று எஸ். மீனாட்சி என்பவர் வலியுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலவரங்களை மகிழம்பூ சட்டமன்ற உறுப்பினரின் தொடக்கமாக கொண்டுச் சென்று வேண்டிய உதவிகள் வழங்க முயற்சிப்பதாக பத்துகாஜா தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். மோகன் தெரிவித்தார்.
இங்கு நடைபெற்ற மகிழம்பூ மஇகா கிளைக் கூட்டத்தில் வசதி குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
அந்த உதவிப் பொருட்களக வர்த்தக பிரமுகர் கேசவன் எடுத்து வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2025, 11:03 pm
இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாஸ் முஹம்மத் நயீம் அப்துல்லாஹ் கெடா மாநில தொக்கோ மௌலிதுர் ரசூல் விருது பெற்றார்
September 5, 2025, 10:40 pm
கோலாலம்பூரில் அடிமை விலங்கொடித்த அண்ணல் நபி (ஸல்) ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது
September 5, 2025, 8:41 pm
தேசிய முன்னணி நிராகரித்த போதிலும் ஜிஆர்எஸ் நம்பிக்கை கூட்டணியில் உள்ளது
September 5, 2025, 8:40 pm
மூன்று ஆண்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர்: போலிஸ்
September 5, 2025, 8:38 pm
மசீசவுக்காக காத்திருக்காமல் மஇகா சொந்த முடிவை எடுக்கும்: டத்தோ ஆனந்தன்
September 5, 2025, 8:37 pm
டிரெய்லர் லோரியை மோதி கார் விபத்துக்குள்ளானது: 5 மாணவர்கள் மரணம்
September 5, 2025, 8:36 pm
ஜிஆர்எஸ் கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற தேசிய முன்னணியின் முடிவை நம்பிக்கை கூட்டணி மதிக்கிறது: பிரதமர்
September 5, 2025, 8:34 pm
தேசியக் கூட்டணி, மஇகா, மசீச கட்சிகளுக்கு இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தன: அஸ்மின்
September 5, 2025, 3:51 pm
ஆயுதங்களை கடத்த முயன்றதற்காக ஆடவர் கைது; போலிஸ் விசாரணைகளை நடத்துகிறது: சைபுடின்
September 5, 2025, 3:50 pm