நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு; 60 பேர் மரணம்: 100 பேர் காயம்

மாஸ்கோ:

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

அதில் கிட்டத்தட்ட 100 பேர் காயமடைந்ததாகவும் ரஷ்யா கூறியது.

தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

பதற்ற நிலையில் மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அங்கு வெடிகுண்டுகளும் போடப்பட்டதாகக் கூறப்பட்டது.

தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. சுமார் 100 பேர் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோவில் வார இறுதியின் போது நடைபெறவிருந்த அனைத்துப் பொது நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்பட்டன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset