நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நிகழ்ச்சி 

துபாய்: 

உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விமான நிலைய ஊழியர்கள் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டனர். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் திறப்பு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். 

இந்நிலையில் முதன்முறையாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல கலாசாரங்களை கொண்ட விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். 

இந்த இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுக்கு பேரீச்சம் பழம், தண்ணீர், ஜூஸ், பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களைக் கொண்டு நோன்பு திறக்கும் நேரம் வந்ததும் அனைவரும் பிரார்த்தனை செய்து நோன்பை திறந்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset