நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்

ஒட்டாவா:

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 இந்தியர்களைக் கனடா காவல்துறை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.  

இதில் இந்திய உளவாளிகளின் பங்கு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டினார். இதனை இந்தியா மறுத்தது.

இதனால் இருநாட்டு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கரண்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங், கரண் ப்ரார் ஆகிய 3 இந்தியர்களை கனடா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களுக்கு எதிராக கொலை, கொலைக்கு சதி தீட்டுதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset