செய்திகள் மலேசியா
150 குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா வழங்கியது
ஈப்போ:
எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா ஆதரவுடன் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
சுங்கை சிப்புட் அம்னோ மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
எஹ்சான் குழுமத்தின் நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்து அன்பளிப்புகளை வழங்கினார்.
தமது நிறுவனம் கடந்த 30 ஆண்டு காலமாக இந்த சேவை வழங்கி வந்தாலும் இம்மாநிலத்தில். கடந்த நான்கு ஆண்டு காலமாக கிம்மா கட்சியுடன் இணைந்து வறுமை நிலையில் உள்ள இந்திய முஸ்லிம் சமுகத்தினரை அடையாளம் கண்டு இந்த சேவையை வழங்கி வருவதாக டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.
நாடு முழுவத்திலும் 5 ஆயிரம் பேருக்கு இந்த அன்பளிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் தொடக்கமாக பேரா சுங்கை சிப்புட்டில் இந்த அன்பளிப்புகளை வழங்கியுள்ளதாக நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த சேவையை வழங்க வாய்ப்புகளை வழங்கிய இறைவனுக்கு நன்றியை கூறிக்கொண்ட அவர், சமுக அமைப்புகள், தனியார் நிறுவனங்களும் வறுமை நிலை மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்குவதின் வழி பெருநாள் காலங்களில் ஏற்படும் அவர்களது குடும்ப சுமையை குறைக்க உதவும் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இதில் தேசிய, மாநில நிலையில் உள்ள கிம்மா கட்சியின் முக்கிய தலைவர்களான துவான் ஹாரிஸ், டத்தோ அன்வர் சதாத், ஹுசைன் ஜமால் உட்பட கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
31,000 ஆறாம் படிவ மாணவர்கள் பொதுப் பள்ளி உதவித் தொகையைப் பெறுவார்கள்: பிரதமர்
July 28, 2026, 11:14 am
