செய்திகள் மலேசியா
150 குடும்பங்களுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்பு எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா வழங்கியது
ஈப்போ:
எஹ்சான் குழுமம், பேரா மாநில கிம்மா ஆதரவுடன் வசதி குறைந்த 150 குடும்பங்களுக்கு பெருநாள் அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
சுங்கை சிப்புட் அம்னோ மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
எஹ்சான் குழுமத்தின் நிறுவனர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்து அன்பளிப்புகளை வழங்கினார்.
தமது நிறுவனம் கடந்த 30 ஆண்டு காலமாக இந்த சேவை வழங்கி வந்தாலும் இம்மாநிலத்தில். கடந்த நான்கு ஆண்டு காலமாக கிம்மா கட்சியுடன் இணைந்து வறுமை நிலையில் உள்ள இந்திய முஸ்லிம் சமுகத்தினரை அடையாளம் கண்டு இந்த சேவையை வழங்கி வருவதாக டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் கூறினார்.
நாடு முழுவத்திலும் 5 ஆயிரம் பேருக்கு இந்த அன்பளிப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் தொடக்கமாக பேரா சுங்கை சிப்புட்டில் இந்த அன்பளிப்புகளை வழங்கியுள்ளதாக நிகழ்விற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இந்த சேவையை வழங்க வாய்ப்புகளை வழங்கிய இறைவனுக்கு நன்றியை கூறிக்கொண்ட அவர், சமுக அமைப்புகள், தனியார் நிறுவனங்களும் வறுமை நிலை மக்களுக்கு தொடர்ந்து உதவிகள் வழங்குவதின் வழி பெருநாள் காலங்களில் ஏற்படும் அவர்களது குடும்ப சுமையை குறைக்க உதவும் என்றார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.

இதில் தேசிய, மாநில நிலையில் உள்ள கிம்மா கட்சியின் முக்கிய தலைவர்களான துவான் ஹாரிஸ், டத்தோ அன்வர் சதாத், ஹுசைன் ஜமால் உட்பட கலந்துகொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
