செய்திகள் இந்தியா
சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம்: 500க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை:
புதுச்சேரி சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு துணைநிலை ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட இந்தியா கூட்டணி கட்சியின் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை முயற்சியில் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரி முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று காலை தொடங்கிய முழு அடைப்பு போராட்டத்திற்கு பெரும்பாலான வணிக நிறுவனங்கள், வியாபாரிகள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் புதுச்சேரி மாநிலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
முழு அடைப்புக்கு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இரண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியா கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகை அருகே வந்த போது போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றதோடு, தடுப்புகளையும் தள்ளி விட முயற்சித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am