நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தீ விபத்து காரணமாக சௌத்ஹாம்டன்- பிரிஸ்டன் மோதும் ஆட்டம் ஒத்திவைப்பு!

லண்டன்:

செயின்ட் மேரிஸ் அரங்கின் அருகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சௌத்ஹாம்டன்- பிரிஸ்டன் மோதும் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

சௌத்ஹாம்டனுக்கு சொந்த மைதானமான செயின்ட் மேரிஸ் அரங்கின் அருகே திடீரென்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது

இதனால் பிரிஸ்டன்  அணிக்கு எதிராக  நடைபெற இருந்த லீக் சாம்பியன் கால்பந்து போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரங்கை ஒட்டிய சில மீட்டர் தொலைவில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீ விபத்து, போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏற்பட்டுள்ளது.

மேலும் அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தன் காரணமாக  அரங்கத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டி ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கால்பந்து லீக் அதிகாரிகளும், இரண்டு கால்பந்து கிளப்களும் அறிவித்துள்ளன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset