நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ் 

கோலாலம்பூர்:

பிரிட்டிஷ் ஏர்வேஸ் வரும் நவம்பரில் கோலாலம்பூக்கான தனது பயணத்தை மீண்டும் தொடங்கவுள்ளது.

இது தொற்றுநோய்க்குப் பிந்தைய ஆசியாவிற்கு அதன் வர்த்தகத்தை  விரிவுபடுத்துவதற்கான திட்டமாக அமைந்துள்ளது.

மலேசிய சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு இடையே போயிங் பி 787-9 விமானத்தில் தினசரி சேவைகள்  வழங்கப்படவுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விமான நிறுவனத்தின் 7 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

புதிய இணையதளம், இலவச ஆன் போர்டு மெசேஜிங், புதிய குறுகிய தூர இருக்கைகள் ஆகியவை அதில் அடங்கும்.

இதை அந்நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset