நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய கராத்தே மேம்பாட்டுக் குழு தலைவராக ஷர்மேந்திரன் நியமனம்

கோலாலம்பூர்:

தேசிய கராத்தே மேம்பாட்டுக் குழுவின் தலைவராக ஆர். ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் தேசிய கராத்தே வீரராவார்.

சீ விளையாட்டுப் போட்டியின் கராத்தே பிரிவில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்றவர் ஷர்மேந்திரன்.

இவர் கடந்தாண்டு தேசிய கராத்தே அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் மலேசிய கராத்தே கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று மீண்டும் கராத்தேவுக்கு திரும்பியுள்ளார்.

இம்முறை அவர் தேசிய கராத்தே மேம்பாட்டுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரின் இந்த நியமனத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset