செய்திகள் மலேசியா
நாட்டின் 530ஆவது தமிழ்ப்பள்ளியான சுங்கை சிப்புட் ஹீவூட் பள்ளி மார்ச் 11ல் செயல்பட தொடங்கும்
சுங்கை சிப்புட்:
நாட்டின் 530ஆவது தமிழ்ப்பள்ளியான சுங்கை சிப்புட் ஹீவூட் பள்ளி மார்ச் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் என்று அப் பள்ளியின் நடவடிக்கைக் குழுத் தலைவத் சொ. தியாகராஜன் கூறினார்.
பேரா மாநிலத்தின் 135ஆவது தமிழ்ப்பள்ளியாக விளங்கும் இப்பள்ளி கடந்த 2012ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்த பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.
இப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவு பெற்ற்றுள்ளன.
தற்போது அப் பள்ளியின் சாவியை கல்வியமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுச் செயலாளர் டத்தோ மஸ்யாத்தி அபாங் இப்ராஹிமிடம் குத்தகையாளர் விவேகானந்தன் ஒப்படைத்தார்.

பின் பள்ளியின் சாவி தலைமையாசிரியர் தி. பொன்மணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இப் பள்ளி வரும் மார்ச் 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கும் என்று தியாகராஜன் கூறினார்.
இப் பள்ளி 6 ஏக்கர் நிலத்தில் 12 வகுப்பறைகளுடன் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பேரா மாநிலத்தில் நவீன வசதிகளைக் கொண்ட பெரிய பள்ளிகளில் ஒன்றாக சுங்கை சிப்புட் ஹீவூட் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 28, 2025, 2:30 pm
MS Gold 5ஆவது கிளையின் திறப்பு விழா: டத்தோ மாலிக்கின் தாயார் திறந்து வைத்தார்
November 28, 2025, 2:24 pm
முகமூடி அணிந்த எம்ஏசிசி அதிகாரிகள் தொழிலதிபர் ஆல்பர்ட் டெய்யை கைது செய்தனர்
November 28, 2025, 11:59 am
பள்ளிகளில் திடல் இல்லை என்பது விளையாடும் பருவத்தில் உள்ள மாணவர்களுக்கு மிகப் பெரிய துயரமாகும்: டத்தோஸ்ரீ சரவணன்
November 28, 2025, 11:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
November 27, 2025, 10:29 pm
கம்போங் ஜாவா லோட் வீடுகள் விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிக்கிறது: பாதிக்கப்பட்ட மக்கள்
November 27, 2025, 10:14 pm
வெப்பமண்டல புயலால் பலத்த காற்றுடன் 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யலாம்: மெட் மலேசியா
November 27, 2025, 3:38 pm
பள்ளி விடுதி குளியலறையில் தாக்கப்பட்ட 4ஆம் படிவம் மாணவர் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்
November 27, 2025, 3:37 pm
