செய்திகள் உலகம்
இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வி நோயாளர்கள்
கொழும்பு:
பாலியல் நோயான எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலங்கயில் 14% அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் புதிய எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14.3% அதிகரித்துள்ளதாக அதன் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, 694 புதிய எச்.ஐ.வி நோயாளிகள் கண்டறியப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.
இதன்படி, 611 ஆண்கள் புதிதாக தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இது 88 வீதமாகும் என வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.
மேலும், இந்த காலப்பகுதியில், 81 பெண்கள் புதிதாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இது 11.7 சதவீதமாகும்.
இதன்படி, சமூகத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 4,100 என மதிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், 607 புதிய எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.
இதேவேளை, ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானால், அதன் அறிகுறிகளை வெளிப்படுத்த சுமார் எட்டு வருடங்கள் ஆகும் என வைத்திய நிபுணர் ஜானகி விதானபத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எச்.ஐ.வி அறிகுறிகளுக்கு நிகரான அவதானங்கள் தென்பட்டால், எச்.ஐ.வி பரிசோதனை அவசியம் எனவும், அதற்காக பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஜானகி விதானபத்திரன மேலும் தெரிவித்தார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm