செய்திகள் உலகம்
விமானத்தில் சுற்றித் திரிந்த எலி: 3 நாட்களுக்கு விமானம் நிறுத்தம்
கொழும்பு:
இலங்கையின் தேசிய விமான நிறுவனம், அதன் விமானம் ஒன்று 3 நாள்களுக்குச் செயல்படாததற்கு எலியைக் காரணம் காட்டியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் (Lahore) நகரிலிருந்து இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு வந்துகொண்டிருந்தபோது SriLankan Airlines A330 விமானத்தில் எலி காணப்பட்டது.
அதைத் தொடர்ந்து விமானம் 3 நாள்களுக்குக் கொழும்பில் (Colombo) நிறுத்தப்பட்டது.
எலி விமானத்தின் முக்கியப் பகுதிகளைக் கடித்துச் சேதப்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்ய விமானம் முழுதும் தேடப்பட்டது.
கடைசியில் அந்த எலி மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறகுதான் விமானம் மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.
ஆயினும் மூன்று நாள்கள் விமானம் பறக்காததால் பயண அட்டவணையில் பெரிய குளறுபடி ஏற்பட்டதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே விமான நிறுவனத்தின் நிதி நிலைமை மோசம்.
சென்ற ஆண்டு (2023) SriLankan Airlines, 1.8 பில்லியன் டாலருக்கு மேல் இழந்தது.
ஆதாரம்: மீடியா கோர்ப்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm