செய்திகள் தொழில்நுட்பம்
ஜொகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் விரைவில் ஆளில்லா வானூர்திகளில் பொருள் விநியோகம்
ஜொகூர் பாரு:
ஜொகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பொருள்களை அதிவேகத்தில் விநியோகிக்கப் புதிய வசதி விரைவில் அறிமுகம் ஆகலாம்.
ஆளில்லா வானூர்திகளின் உதவியுடன் அது சாத்தியமாகக்கூடும்.
திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால்
தென்கிழக்காசியாவின் முதல் ஆளில்லா வானூர்தி விநியோகச் சேவையாக அது விளங்கும்.
ஆவணங்கள், மருந்துப் பொருள்கள் போன்றவற்றை அவசரமாகக் கொண்டுசேர்க்க வேண்டியிருந்தால் அந்தச் சேவையை நாடலாம்.
ஆளில்லா வானூர்திகள் அதிகபட்சமாக 30 கிலோகிராம் எடையை ஏந்திச்செல்லும்.
சிங்கப்பூரின் DroneDash நிறுவனமும் மலேசிய நிறுவனமான Aerodyneஉம் இணைந்து திட்டத்தை உருவாக்கியுள்ளன.
கடல்வழி சரக்கு விநியோகத்தைவிட 5 மடங்கு விரைவாக வானூர்திகளால் பொருள்களைக் கொண்டுசேர்க்க முடியும் என்கின்றன நிறுவனங்கள்.
கரிம வெளியேற்றத்தின் அளவும் குறைவு என்பதால் சுற்றுச்சூழலுக்கு இத்திட்டம் உகந்ததாக அமையும்.
தொடக்கமாக சிங்கப்பூருக்கும் ஜொகூர் பாரு உள்ளிட்ட தென் மலேசியப் பகுதிகளுக்கும் இடையே விநியோகச் சேவை அறிமுகமாகும்.
பின்னர் மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கும் ஏனைய வட்டார நாடுகளுக்கும் சேவையை விரிவுபடுத்தத் திட்டமுள்ளது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் வாடிக்கையாளர் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 7:07 am
விக்கிபீடியாவுக்கு போட்டியாக Grokipedia-வை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க்
October 17, 2025, 3:18 pm
கரடிகள் நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க AI செயலி
October 15, 2025, 10:43 pm
ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் முதலீட்டில் AI தரவு மையம் அமைக்கிறது கூகுள்
September 29, 2025, 10:49 pm
சிங்கப்பூரில் Chatbot மூலம் இனி காவல் நிலையத்தில் சுலபமாகப் புகார் அளிக்கலாம்
September 26, 2025, 3:05 pm
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை ஏவி சாதனை
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
