நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு; நாட்டின் பொருளாதாரம் இன்னும் வீழும்: மத்திய வங்கி எச்சரிக்கை

கொழும்பு:

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து வசதி வேண்டி புலம் பெயர்ந்தால் நாடு மீண்டு எழாது என்று
எச்சரித்துள்ளது இலங்கை மத்திய வங்கி.

இது தொடர்ந்தால் நாட்டின்
பொருளாதாரம் வளர்ச்சி அடையாது, தேங்கிவிடும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது. 
கணிக்கப்பட்ட அளவை விட குறையும் அபாயம் இருப்பதாக இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

திறன்மிக்க இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், உலகத் துறையில் சாதகமற்ற போக்குகள் ஏற்றுமதித் துறையின் மீட்சியையும், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பது உற்பத்தித் திறனையும் பாதிக்கிறது.

இதன் காரணமாக குறுகிய கால மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி குறையும் அபாயம் உள்ளது.
தற்போது கணிக்கப்பட்டுள்ளபடி, குறுகிய காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பொருளாதாரம் படிப்படியாக அதிக வளர்ச்சி நிலைக்கு வரும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset