
செய்திகள் இந்தியா
குவைத்தில் இருந்து மும்பைக்கு மீன்பிடி படகில் வந்த தமிழர்கள்
மும்பை:
குவைத்திலிருந்து மீன்பிடி படகில் மும்பைக்கு வந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 மூவரை போலீஸார் கைது செய்தனர்.
மும்பை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த விசைப்படகை சுற்றிவளைத்தனர்.
படகில் இருந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்து கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் மூவரும் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் வினோத் அந்தோணி, சகாய அந்தோணி அனிஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த நிதிஷோ டிதோ என்பதும் தெரியவந்தது.
பிடிபட்ட மூவரும் குவைத்தில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்து வந்ததும், அவர்களை அழைத்துச் சென்ற முகவரின் மோசமான நடவடிக்கை காரணமாக அங்கிருந்து மீன்பிடி படகில் தப்பித்து இந்தியா வந்ததும் தெரியவந்தது.
குவைத்தில் இருந்து புறப்பட்டு சவூதி அரேபியா, கத்தார், துபாய், மஸ்கட், ஓமன், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக தெரிகிறது. படகில் இருந்து கைப்பற்றப்பட்ட ஜிபிஎஸ் மூலம் அவர்கள் வந்த் பாதை தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm