
செய்திகள் இந்தியா
புது டெல்லி மெட்ரோ ரயில் சுவர் இடிந்து ஒருவர் மரணம்
புதுடெல்லி:
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் கோகுல்புரி மெட்ரோ நிலையத்தின் பிளாட்பாரத்தின் பக்கச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த வினோத்குமார் (53) என்பவர் பலியானார் .
மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாலை மூடப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் ஏராளமானோர் இருந்தனர்.
விபத்துக்குப் பிறகு, தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஒற்றைப் பாதையில் இயக்கப்படுகிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு டிஎம்ஆர்சி ரூ.15 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 12, 2025, 11:03 pm
மத்திய பிரதேசத்தில் 90 டிகிரி வளைவில் திரும்பும் மேம்பால சர்ச்சை
June 12, 2025, 9:42 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்
June 12, 2025, 9:04 pm
ஏர் இந்தியா விமானம் எச்சரித்த MAYDAY call
June 12, 2025, 5:37 pm
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணமா?
June 12, 2025, 5:23 pm
புறப்பட்ட 3 நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்: 242 பயணிகளின் நிலை என்ன?
June 11, 2025, 5:03 pm
வரதட்சணையாக பைக், நகை தரமுடியாதா? அப்படியென்றால் கிட்னி தா: மிரட்டிய மாமியார்
June 11, 2025, 11:21 am
‘ஆபரேஷன் ஹனிமூன்’: மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது
June 10, 2025, 9:19 pm
கேரளத்தில் நடுக்கடலில் தீப்பற்றி எரியும் கப்பல் கவிழ்கிறது
June 10, 2025, 6:47 pm