செய்திகள் இந்தியா
புது டெல்லி மெட்ரோ ரயில் சுவர் இடிந்து ஒருவர் மரணம்
புதுடெல்லி:
இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் கோகுல்புரி மெட்ரோ நிலையத்தின் பிளாட்பாரத்தின் பக்கச் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த வினோத்குமார் (53) என்பவர் பலியானார் .
மேலும் இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த சாலை மூடப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது சாலையில் ஏராளமானோர் இருந்தனர்.
விபத்துக்குப் பிறகு, தற்போது இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் ஒற்றைப் பாதையில் இயக்கப்படுகிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு டிஎம்ஆர்சி ரூ.15 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 5:30 pm
ஆக்ராவில் பரபரப்பு: 15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
March 31, 2026, 5:29 pm
விமான நிலையத்தில் நுழைந்த கரடி: கர்நாடக வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை
March 31, 2026, 5:28 pm
மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு: திருப்பதியில் பேருந்து ஓட்டுநர் கல்லால் அடித்துக் கொலை
March 31, 2026, 3:58 pm
உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கவுள்ளது
March 30, 2026, 5:39 pm
மும்பையில் இரயில் விபத்து: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த உயிர் பலி
March 30, 2026, 5:38 pm
டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: சிலிண்டரால் அடித்து மனைவியைக் கொன்ற கணவன் கைது
March 30, 2026, 5:37 pm
விமானக் கதவைத் திறக்க முயன்ற பயணி: துரிதமாகச் செயல்பட்டு விபத்தைத் தவிர்த்த ஊழியர்கள்
March 30, 2026, 3:46 pm
கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் படுகொலை: கடற்படை அதிகாரி வீட்டில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவம்
March 29, 2026, 6:44 pm
திருப்பதி பயணத்தில் நேர்ந்த துயரம்: பேருந்து விபத்தில் 10 பேர் கருகிப் பலி
March 29, 2026, 6:43 pm
