நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை பிராய் குழாய் இணைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன

ஜார்ஜ் டவுன்:

சுங்கை பிராயின் குறுக்கே இரண்டு 600 மில்லி மீட்டர் குழாய்களை இணைக்கும் பணி இன்று அதிகாலை நிறைவடைந்தது. 

இரண்டு குழாய்களை இணைக்கும் பணி செவ்வாய்கிழமை (ஜனவரி 30) இரவு 11.30 மணிக்கு தொடங்கி 16 மணிநேரம் எடுக்க திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே முடிக்கப்பட்டது என்று பினாங்கு மாநில நீர் நிர்வாக ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

அதைத் தொடர்ந்து, தீமூர் லாவுட் மற்றும் பாராட் டாயா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட 120,000 நுகர்வோரில் 84% பேருக்கு நீர் விநியோகத்தை மீட்டெடுப்பது முன்னதாகவே தொடங்கி நாளை நிறைவடையும். 

கடந்த செவ்வாய்கிழமை சுங்கை பிராய் அடிவாரத்தில் குழாய் கசிவு ஏற்பட்டது

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset