நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீனர்களுக்கு நிகராக கூடைப்பந்து விளையாட்டில் சாதிக்கும் இந்திய மாணவர் ஷர்வின்- டத்தோ நெல்சன் பாராட்டு

பெட்டாலிங்ஜெயா:

சீனர்களுக்கு நிகராக கூடைப்பந்து விளையாட்டில் இந்திய மானவர் ஷர்வின் சாதித்து வருகிறார்.

இவ்வேளையில் மஇகாவின் சார்பில் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக அதன் கல்விக் குழு தலைவர் டத்தோ நெல்சன் கூறினார்.

மாணவர் ஷர்வின் ஆனந்த இங்குள்ள சீனப்பள்ளியில் பயின்று வருகிறார்.

ஷர்வின் மிகவும் உயரமான மாணவர் என்பதால் அவர் கூடைப்பந்து அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டார்.

அணியில் இணைந்த அவருக்கு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. தற்போது பள்ளியை பிரதிநிதித்து பல போட்டிகளில் கலந்து அவர் சாதனையை படைத்து வருகிறார்.

குறிப்பாக சீனர்களுக்கு நிகராக அவர் இந்த சாதனைகளை படைத்து வருகிறார்.

அவர் இன்னும் பல சாதனைககளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் மஇகாவின் சார்பில் கௌரவிக்கப்பட்டது.

மேலும் ஷர்வினின் சாதனைக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்று டத்தோ நெல்சன் கூறினார்.

கூடைப்பந்துப் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்து விளையாட வேண்டும். அதுவே எனது இலக்கு.

இந்த இலக்கை அடைய தொடர்ந்து போராடுவேன் என்று மாணவர் ஷர்வின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset