நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடன் தரும் நிறுவனங்கள் எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த தடை

கோலாலம்பூர்:

கடன் தரும் நிறுவனங்கள் எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை எஸ்எஸ்எம் எனப்படும் மலேசிய நிறுவன பதிவு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் கடன் வழங்கும் நிறுவங்களின் விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. இதில் பல விளம்பரங்களின் எஸ்எஸ்எம் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்எஸ்எம் சின்னத்தை பயன்படுத்த, பணக்கடன் வழங்கும் எந்த தரப்பினருக்கும் அனுமதி வழங்கவில்லை.

அனுமதியின்றி சின்னத்தை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்எஸ்எம் கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset